எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் 2-வது நாளாக மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
1 min read
Lok Sabha adjourned for 2nd day due to continuous protests by opposition parties
14/3/2023
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் 2-வது நாளாக முடங்கியது.
பட்ஜெட் கூட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. அவை தொடங்கியவுடன் இந்திய ஜனநாயகம் தொடர்பாக லண்டனில் ராகுல் காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நேற்று பா.ஜனதா, காங்கிரஸ் உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்தநிலையியில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் இன்று 2-வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாள் அலுவல்கள் அமளி காரணமாக முழுவதும் முடங்கின. மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ராகுல்காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரம் உள்ளிட்டவைகளால் ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையில் கூச்சல், குழுப்பம் நிலவியது.