செங்கோட்டையில் மரணத்திலும் இணைபிரியாத தம்பதி
1 min read
A couple who were not united in death at the Red Fort
17.3.2023
தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் மாரடைப்பால் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திலும் இணைபிரியாத தம்பதிக்கு அந்த பகுதிமக்கள் பெருந் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
கணவன்-மனைவி
செங்கோட்டை நகராட்சி பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி என்ற துரை ( வயது 58 ) . வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார் . இவருடைய மனைவி கல்யாணி (வயது 50) .நேற்று அதிகாலை மாடசாமி என்ற துரை வீட்டில் இருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது . சிறிது நேரத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதைப்பார்த்த கல்யாணி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார் . தனது கணவர் உடலை பார்த்து அவர் கதறி அழுதுகொண்டே இருந்த நிலையில் திடீரென கல்யாணி , அவரது கணவரின் உடலில் சாய்ந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழந்த செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்களது வீட்டில் உறவினர்களும் , அப்பகுதி மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். .