June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மஞ்சப்பை விழிப்புணர்வுக்காக கல்லூரி மாணவியர்களின் தொடர் சங்கிலி நிகழ்ச்சிக்கு உலக சாதனை விருது

1 min read

World Achievement Award for College Girls’ Serial Chain Program for Manjapai Awareness

1.3.2023
கல்லூரி மாணவியர்களின் தொடர் சங்கிலி நிகழ்ச்சிக்கு உலக சாதனை விருதினைகன்னியாகுமரி ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்

மஞ்சப்பை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சுமார் 2500க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்ட மீண்டும் மஞ்சப்பை தொடர் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர்

பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழச்சியில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரும் பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது.

மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நீர் நிலைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து அடுத்த தலைமுறையினரும்

தெரிந்துகொள்ளும் வகையில் சக மாணவ, மாணவியர்கள், சுற்றத்தார், உறவினர்கள் உள்ளிட்ட

அனைவரிடமும் எடுத்துக்கூற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழி இல்லா குமரி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அனைத்துதரப்பினரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலிருந்து முகக்கவசம், கை கழுவும் திரவம் மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட மருந்து கழிவுகள் உள்ளிட்டவைகள் சரியான முறையில்

அழிப்பது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலுமாக ஒழிப்பது

குறித்தும், போதைப்பொருள் தடுப்பது குறித்து மாவட்ட சமூக நல அலுவலகம், பல்வேறு தன்னார்வலர்கள் வாயிலாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மீண்டும் மஞ்சப்பை தொடர் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் அதில் கலந்து கொண்ட அனைத்து

மாணவியர்களையும் இத்தருணத்தில் பாராட்டுவதோடு, தொடர்ந்து நமது மாவட்டத்தை பசுமை

மாவட்டமாகவும், நெகிழி இல்லா குமரி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில்

மாணவியர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு

கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்ஸ்ரீதர் பேசினார்.

உலக சாதனை விருது

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மாபெரும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர் சங்கிலி நடத்தியதற்காக இந்திய உலக சாதனை அமைப்பால் வழங்கப்பட்ட உலக சாதனை விருதினை ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி சகாய செல்வி அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்

அருட்சகோதரி சகாய செல்வி, செயலாளர் அருட்சகோதரி கில்டா, கல்லூரி துணை முதல்வர் அருட்சகோதரி லீமா ரோஸ், திருப்புமுனை இயக்குநர் அருட்பணி நெல்சன் உள்ளிட்டபேராசிரியர்கள், மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.