June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் கஞசா விற்ற 3 பேர் கைது

1 min read

3 arrested for selling ganja in Tenkasi district

8.4.2023-
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின் பேரில் தனிப்படை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உட்கோட்ட தனிப்படை சார்பு ஆய்வாளர் வேல்முருகனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் புளியங்குடி மரக்கடை தெரு பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை விசாரித்ததில் அவர் கஞ்சா தனக்கு தரும் நபர் யார் என சொல்லிவிடுவதாகவும் தான் போன் செய்தால் கஞ்சாவையும் கொண்டு வருவதாகவும் அப்ரூவல் ஆனார்
அதனைத் தொடர்ந்து நேற்று லட்சுமணன் போன் செய்து சாகுல் ஹமீது என்பவரிடம் வழக்கம்போல் கஞ்சா கொண்டு வருமாறு கூறியதன் பேரில் காத்திருந்த தனிப்படையினர் சாகுல் ஹமீதை சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்,

இதன் தொடர்ச்சியாக சாகுல் ஹமீதிடம் விசாரணை செய்து அவர் கொடுத்த தகவலின் பெயரில் தொடர்ச்சியாக புளியங்குடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் வாசுதேவநல்லூரை சேர்ந்த கண்ணன் ஆகிய 2 நபர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மேற்படி சாகுல் அமீது, ராஜ்குமார் மற்றும் கண்ணன் ஆகிய 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரு கஞ்சா வியாபாரியை பிடித்த நிலையில் மேலும் இரண்டு நபர்களை லாவகமாக கைது செய்த
புளியங்குடி உட்கோட்ட தனிப்படை சார்பு ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் அவருடன் இணைந்து சிறப்பாக நடத்திய கஞ்சா வேட்டையில் மூன்று பேர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவலர்களையும் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் வெகுவாக பாராட்டினார்.

=முத்துசாமி, நிருபர், தென்காசி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.