தென்காசியில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்.
1 min read
Day gathering of people in Tenkasi.
9/5/2023
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை, இரவிச்சந்திரன். தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாயவிலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களில் சிறப்பாகவும் பொதுமக்ககள் வரவேற்கத்தக்க வகையிலும் பணிபுரியும் நியாயவிலைகடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தென்காசி மாவட்ட அளவில் தேர்வுசெய்யப்பட்ட பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார்கள்.
கண்ணகி என்ற விற்பனையாளருக்கு முதல் பரிசுக்ககான தொகை ரூபாய் 4,000, .சங்கர் என்ற விற்பனையாளருக்கு இரண்டாவது பரிசுக்கான தொகை ரூபாய் 3,000 மற்றும மு.வீரமணி என்ற எடையாளருக்கு முதல் பரிசுக்கான தொகை ரூபாய்1,000, மு.முகமதுமைதீன் எடையாளருக்கு இரண்டாவது பரிசுக்கான தொகை ருபாய் 2,000 வழங்கப்பட்டது.
உதவித்தொகை
மேலும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை உ அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல பட்டாமாறுதல் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 431 மனுக்கள் பெறப்பட்டது. இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக் களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி ஆணையர் (கலால்)ஜி.ராஜ மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் கலந்துகொண்டனர்