செங்கோட்டை நகர்மன்ற தலைவரை அறையில் வைத்து பூட்டிய கவுன்சிலர்கள்
1 min read
The councilors locked the Sengottai city councilor in the room
20.5.2023
செங்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக பாஜக உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவரை அலுவலக அறைக்குள் பூட்டி வைத்த சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க உறுப்பினர்கள் தி.மு.க நகர்மன்ற தலைவியுடன் ஏற்பட்ட மோதல், தாக்குதல் காரணமாக காவல் நிலையத்தில் நகர்மன்ற தலைவி,நகர்மன்ற உறுப்பினர்கள் சிலரின் மீது வழக்கு பதியப்பட்டு உள்ள நிலையில் இன்றைய கூட்டம் காவல் துறையினரின் பாதுகாப்புகளுடன் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் ஜெகன் காவல் நிலையத்தில் வழக்கு உள்ள நிலையில் நீங்கள் நீதிமன்ற பிணை பெற்றே வந்திருக்க வேண்டிய நிலையில் கூட்டம் எப்படி நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினார் அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் குரல் எழுப்பினார்கள.
இந்நிலையில் நகர்மன்ற தலைவியின் இருக்கையை முற்றுகையிட்ட அ.தி.மு.க, பா.ஜ.க உறுப்பினர்களிடம் தி.மு.க நகர்மன்ற உறுப்பினரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான எஸ்.எம்.ரஹீம் காவல் நிலைய வழக்கு குறித்து காவல் துறை நடவடிக்கை எடுக்கும் நீங்கள் உங்கள் வார்டு மக்கள் பிரச்சனைகளை பற்றி மட்டும் கூட்டத்தில் பேசுங்கள் என கூறினார்.
ஆனால் அதிமுக – பாஜக உறுப்பினர்கள் தொடர் முற்றுகையிட்டு கூட்ட அரங்கை விட்டு வெளியேற முயன்ற நகர்மன்றத் தலைவி ராமலெட்சுமியை யை கூட்ட அரங்கின் கதவை அடைத்து வெளியே செல்லவிடாமல் தடுத்த நிலையில் தொடர்ந்து நகராட்சி ஆணையாளரிடம் மக்கள் பிரச்சனைகள் குறித்து கேட்க மறுக்கும் நகர்மன்ற தலைவி பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களுடன் முறையிட்டனர்.
இதனால் நகர்மன்ற வளாகம் மிகுந்த பதட்டத்துடனும், பரபரப்புடனும் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு கதவை திறந்து நகர்மன்றத் தலைவரை மீட்டனர்.மேலும் நகராட்சி அலுவலகத்தில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-முத்துசாமி, நிருபர்.