108 ஆம்புலன்ஸ் குறைபாட்டால் ஆழ்வார்குறிச்சி சிறுவன் பலியானதாக ஆட்சியரிடம் தந்தை புகார்
1 min read
108 Father complains to Collector that Alwarkurichi boy died due to lack of ambulance
23.5.2023
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கவனக்குறைவு மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஆக்சிஜன் சிலிண்டர் செயல்ப டாததால் தனது 6 வயது மகனை இழந்ததாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தந்தை கண்ணீர் மல்க பரபரப்பு புகார் அளித்தார்.
சிறுவன் பலி
தென்காசி மாவட்டம் , ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் இவர் , நேற்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.அந்த புகார் மனுவில் , தனது மகன் முத்து வெங்கடேஷ் (வயது6) என்பவரை காய்ச்சல் காரணமாக அம்பை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செனாறேன். அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக தனது மகனுக்கு சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தனது மகனின் உடல்நிலை மிகவும் மோசமானது.
எனவே மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர் . அப்பொழுது , என் மகனை ஆம்புலன்சில் ஏற்றிய போது எனது மகனுக்கு இதயதுடிப்பு குறைந்து கொண்டே இருந்ததால் ஆக்சிஜன் உதவி தேவைப்பட்டது . அப்பொழுது , ஆம்புலன்ஸில் இருந்த முதலுதவி ஆக்சிஜன் சிலிண்டர் முறையாக செயல்படாததாலும் முறையான பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாத காரணத்தினாலும் எனது மகனுக்கு செயற்கை சுவாசம் கொடுக்க முடியாமல் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தான். அந்த ஆம்புலன்சில் முறையான முதலுதவி வசதிகள் இல்லாத காரணத்தினால் தான் 6 வயதான என் மகன் உயிரிழந்தான்.
இதனால் நானும் என் குடும்பத்தினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம் எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் இனி மேல் யாருக்கும் நடக்காத வண்ணம் தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். .
அதனைத் தொடர்ந்து , செய்தியாளர்களிடம் அவர் கண்ணீர் மல்க . அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை எனவும் , 108 ஆம்புலன்சில் எந்த வசதிகளும் இல்லாத காரணத்தினால் தான் தனது மகனை இழந்ததாகவும் தமிழக அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையில் அம்பை அரசு மருத்துவமனையையும் 108 ஆம்புலன்ஸ் சேவையையும் சீரமைத்து பொதுமக்களின் உயிர்களைக் காக்க முன்வரவேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்