ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் இருதய மாற்று அறுவை சிகிச்சை -ஆட்சியர் வாழ்த்து
1 min read
Cardiac Transplantation at Asaripallam Hospital – Atchiyar Greetings
22.6.2023
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு பூரண குணமடைந்தவரை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
இருதய மாற்று அறுவை சிகிச்சை
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த நபரினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் சந்தித்து. அவருக்கும். மாற்று சிறுநீரகம் வழங்கிய அவருடைய தாயாருக்கும் பழவகைகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுநீரக சிகிச்சை பிரிவில் சிறுநீரக சிகிச்சை பெற்று வந்த தக்கலை குமாரபுரம் மணக்காவிளை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஜீவிதா என்பவருக்கு. மைலாடி காமராஜர் நகர் பகுதியை சார்ந்த அவருடைய அம்மா 52 வயதுடைய தினக்கூலி தொழிலாளராக வேலை செய்யும் சார்லட் தனது சிறுநீரகத்தின் ஒன்றினை தானமாக வழங்கினார். அதற்கான முழு உடல் பரிசோதனையும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ குழுவின் முன் அனுமதி பெற்று கடந்த 06.06.2023 அன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
மருத்துவ குழுவில் ஆசாரப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் பிரின்ஸ் பயஸ் தலைமையில் மருத்துவ கண்காணிப்பாளர் மரு.அருள் பிரகாஷ் உறைவிட மருத்துவர் மரு.ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர் மரு.விஜயலட்சுமி. மரூ.ரெனிமோல் ஆகியோரும், அறுவை சிகிச்சை துறை தலைவர் பேராசிரியர் மரு.ஜெயலால், சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் மரு.பத்மகுமார் மரு.அருண் வர்கீஸ், மயக்கவியல் துறை தலைவர் பேராசிரியர் மரு.எட்வர்ட், சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் மரு.பிராங்க் டேவிட். மரு.செல்வகுமார், இரத்த நாள அறுவை சிகிச்சை துறை தலைவர் பேராசிரியர் மரு.ராஜேஷ் ஆகியோருடன் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியினால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இன்றுடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முழுமையாக செயல்பட்டு 14 நாட்கள் முடிந்து நோயாளியின் உடல் மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஜீவிதா இன்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்ப உள்ளார், என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தொடர் சிகிச்சையாக எதிர் வினையை சீர் செய்யும் சிறப்பு மருந்துகளும், தொடர் கண்காணிப்பு சிகிச்சைகளுக்கான பரிசோதனைகளும் முழுவதுமாக தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும். அதோடு மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனையில் ரூபாய் 10 லட்சம் செலவாகும் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முற்றிலும் தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இலவசமாக நடைபெற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியை பொருத்தவரையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை 2019 ஆம் ஆண்டு முதலில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 35 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 10 மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. 11-ஆவதாக கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை பெருமைக்குரியது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.