ராஜஸ்தானில் முதல்முறையாக பெண்கள், பட்டியில் இன மக்கள் அர்ச்சகர்களாக நியமனம்
1 min read
For the first time in Rajasthan, women have been appointed as tribal priests in Patti
3.7.2023
ராஜஸ்தானில் முதல்முறையாக பெண்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அறநிலையத்துறை
ராஜஸ்தானில் ‘தேவஸ்தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் நிர்வாகங்களை கவனிக்கும் அறநிலையத்துறை அதற்கான அர்ச்சகர்களையும் நியமிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளது.
இப்பணிக்கு கடைசியாக 2014-ல் விளம்பரம் அளிக்கப்பட்டு சுமார் 9 வருடங்களுக்கு பின் 65 அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டனர். அதன் பிறகு தற்போதைய காங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டது. அந்த 17 பேரில் 8 பெண்கள், தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் முதல் முறையாக பெண்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானின் ஒரு பிரிவினர் இடையே புதிய நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 2014-ம் ஆண்டு நடத்தபட்ட தேர்வு முடிவு வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் அரசின் நடவடிக்கையால் மொத்தம் 65 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.