June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 32 அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்புக்கான வாரியம் அமைக்க முடிவு

1 min read

It has been decided to set up a board for abortion in 32 government hospitals in Tamil Nadu

18.7.2023
தமிழகத்தில் 32 அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்புக்கான வாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. உரிய காரணம் இல்லாவிட்டால் கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்க வாரியத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.

கருக்கலைப்பு வாரியம்

தமிழகத்தில் 32 அரசு மருத்துவமனைகளில் தனித்தனியான கருக்கலைப்புக்கான வாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கருக்கலைப்பிற்கு உரிய அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்க அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கருக்கலைப்பு செய்வதற்கு வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தனி வாரியம் அமைக்கப்படும்.
கருக்கலைப்பிற்கான கருத்துக்களை 3 நாட்களுக்குள் வாரியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது உரிய காரணம் இல்லாவிட்டால் கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்க வாரியத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவமனைகள் இதில் அடங்கும். பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் உறுப்பினர்களாக வாரியத்தில் இருப்பார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.