June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழ அணை கட்ட கோரிக்கை

1 min read

Demand to build a dam in Courtalam waterfall for year-round water falls

22.7.2023
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் வகையில் செண்பகாதேவி பகுதியில் அணை கட்ட தமிழக சுற்றுலாத் துறை அமைச்சரிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

குற்றாலம்

சென்னையில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் பல் வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் குற்றாலம் தமிழக சுற்றுலா தலங்களில் சிறந்து விளங்குகிறது.இங்கு ஆண்டுதோறும் சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.மேலும் குற்றாலத்தில் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் மட்டுமே சீசன் காலமாக கருதப்படுகிறது.

இந்தக் காலங்களில் மட்டுமே குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது எனவே குற்றாலம் அருவிகளில் ஆண்டுதோறும் தண்ணீர் விழுந்தால் மேலும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள்.

எனவே குற்றாலத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் வகையில் குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் செண்பகாதேவி அருவி பகுதியில் ஒரு அணை கட்டினால் மழைக்காலங்களில் வரும் தண்ணீரைத் தேக்கி வைத்து ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் விழும் நிலையை ஏற்படுத்து முடியும். இதனால் சுற்றுலாத் துறைக்கு வருமானம் பல மடங்கு உயரும்.

இதனால் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவதோடு தென்காசி மாவட்டம் நெல்,கரும்பு, வாழை, காய்கறிகள், மற்றும் பழங்கள், பூக்கள், சிறுதானியங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்க வாய்ப்பு உள்ளது.

எனவே தாங்கள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு குற்றாலம் மலைப்பகுதியில் செண்பகாதேவி அருவிப்பகுதியில் ஒரு அணைக்கட்டு கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் இவ்வாறு அவர் அந்த மனதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

குண்டாறு

மேலும் செங்கொட்டை ஒன்றியம் புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கண்ணுபுளிமெட்டில் அமைத்துள்ள குண்டாறு அணைக்கட்டு சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது . எனவே குண்டாறு அணைக் கட்டுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்ற வகையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்வதற்கு நிதி ஒதுக்க வேண்டும். என்றும்,

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைத்துள்ள இராமநதி, கடனாநதி, அடவிநயினார் அணை, கருப்பாநதி அணை ஆகிய அணைக்கட்டு பகுதிகளில், உள்ளூர் பொதுமக்கள் நிறைய பேர்கள் சுற்றுலாவிற்கு வந்து கலந்து கொள்கிறார்கள் அந்த பகுதியையும் சுற்றுலா தனமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கோரிக்கை மனிதனைப் பெற்றுக் கொண்ட தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முதலமைச்சரிடம் கலந்து பேசி விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் போது செங்கொட்டை ஒன்றிய திமுக செயலாளர் ரவிசங்கர் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் கோ.சாமித்துரை முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் காசிதர்மம்துரை, தொழிலதிபா மாரித்துரை, ராமானுஜம், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.