மாநில அளவிலான தடகள போட்டியில் சங்கரன்கோவில் மாணவன் வெற்றி
1 min read
Sankarankovi student win in state level athletics competition
22.7.2023
காமராஜர் 121வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தென்காசி மாணவனுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துறை ரவிச்சந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ரயோலா பள்ளியில் வைத்து மாநில அளவிலான பல்வேறு போட்டிகள் நடை பெற்றது. இந்த போட்டியில் தென்காசி மாவட்டம் இலஞ்சி தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் சங்கரன் கோவிலை சேர்ந்த மனோகர் என்பவரது மகன் அருண் சந்தோஷ் என்ற மாணவன் நீளம் தாண்டுதல் போட்டியில் 2-வது இடமும்,200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 26.4 செகண்டில் முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தினை வென்றார்.
மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவன் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில் மாணவன் அருண் சந்தோஷை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. ரவிச்சந்திரன் நேரில் வரவழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். தொடர்ந்து அருண் சந்தோஷ் மற்றும் அவரது தந்தை மனோகரனுடன் மாவட்ட ஆட்சியரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து புகைப்படம் எடுத்து கொண்டார்.