கொடிக்குறிச்சியில் மனுநீதி நாள் முகாம்
1 min read
Human Justice Day Camp at Kodikurichi
14.9.2023-
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட கொடிக்குறிச்சி கிராம சேனைத்தலைவர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 86 பயனாளிகளுக்கு ரூ.5,63,237 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன்; வழங்கினார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட கொடிக்குறிச்சி சேனைத்தலைவர் சமுதாய நலக்கூடத்தில் நேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது;-
தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அத்திட்டத்தை கடைக்கோடி மக்களுக்கு சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது, அனைத்து தரப்பு மக்களும் உயர வேண்டும் என்ற நோக்கில் இந்த அரசானது செயல்பட்டு வருகிறது. கிராமம் தோறும் திட்டங்களை எடுத்து சென்று பயனாளிகளை கண்டறிந்து நலத்திட்ட உதவிகள் தகுந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பேசினார்.
இம்முகாமில் வருவாய் துறையின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி உதவி தொகைக்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு வரன்முறை பட்டாவிற்கான ஆணைகளையும், 7 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 8 பயனாளிக்கு நத்தம் பட்டா ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை ஆணைகளையும், 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவை சான்றையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.27,395 மதிப்பீட்டில் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களையும்,
9 பயனாளிகளுக்கு ரு.58,968 மதிப்பீட்டில் இலவச தேய்ப்பு பெட்டிகளையும், மாவட்ட வேலைவாய்ப்புத் துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.1,15,200 மதிப்பிலான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை ஆணைகளையும், வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் சமையல் எண்ணெய்க்கான தேசிய இயக்கம் , உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.468.75 மதிப்பில் டிரைகோடெர்மா விரிடி மற்றும் உயிர் உரங்களையும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.16,450 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட மேலாளர் தாட்கோ மூலம் 20 பயனாளிகளுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் மூலமாக தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகளையும் என மொத்தம் 86 பயனாளிகளுக்கு ரூ.5,63,237 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன்; வழங்கினார்.
முன்னதாக மறுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினையும், தோட்டக்கலை துறை வேளாண்மை துறை, மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப் பட்டிருந்த கண்காட்சி யினையும் மாவட்ட ஆட்சித் தலைவர்; மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரன் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், கடையநல்லூர் வட்டாட்சியர் கங்கா,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பூங்கொடி,
கடையநல்லூர் ஒன்றிய குழு தலைவர் பா.சுப்பம்மாள், கொடிக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் (பொ).தட்சிணாமூர்த்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.