சுரண்டை அரசு கல்லூரியில்கருணாநி்தி நூற்றாண்டு விழா
1 min read
Surandai Government College Karunanidhi Centenary Celebration
6.10.2023
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த. நிகழ்ச்சிக்கு தமிழக முன்னாள் சட்ப்பேரவை தலைவர் இரா. ஆவுடையப்பன், முன்னாள் பேரவை செயலாளர் மா.செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்நிகழ்ச்சியில் காமராஜர் அரசு கலைக் கல்லூரியைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியதை எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்றது. மேலும், இளங்கலை ஆங்கிலம் மூன்றாமாண்டு மாணவி பா. மாரீஸ்வரி ‘கல்வி சேவையில் கலைஞர்’ என்ற தலைப்பில் உரையாற்றியதற்கு முதலாவது பரிசும், இளநிலை நுண்ணுயிரியல் மூன்றாமாண்டு மாணவர் ஸ்ரீ.அருண்குமார் ‘சமத்துவம் கண்ட சரித்திர நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் உரையாற்றியதற்கு இரண்டாவது பரிசும், முதுநிலை வேதியல் இரண்டாமாண்டு மாணவி அ. வீரலெடசுமி,மகளிர் நலனில் மகத்தான சாதனை என்ற தலைப்பில் உரையாற்றியதற்கு மூன்றாவது பரிசும், இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவி
க.சத்தியகுமாரி சமூகநீதி கண்ட கலைஞர்’ என்ற தலைப்பில் உரையாற்றியதற்கு சான்றிதழும், முதுகலைத் தமிழ் முதலாமாண்டு மாணவர் இரா.தினேஷ்குமார் ‘தமிழ் வளர்ச்சியில் கலைஞர்’ என்ற தலைப்பில் உரையாற்றியதற்கு சான்றிதழையும் முன்னாள் பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் வழங்கி பாராட்டி பேசினார்.
இந்நிகழ்ச்சியல் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சட்டப் பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், இணைச் செயலாளர் சாந்தி, துணைச் செயலாளர் ரேவதி, சார்புச் செயலாளர் வரதராஜன், தென்காசி தெற்கு
மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன்,
சுரண்டை நகர்மன்றத் தலைவர் ப.வள்ளிமுருகன், காமராஜர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் இரா.சின்னத்தாய் உள்பட பலர் கலந்து கொணடனர்.