ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்
1 min read
Assembly election date change in Rajasthan
11.10.2023
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை நவம்பர் 25-ந்தேதிக்கு மாற்றியமைத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
தேர்தல்
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது
அதன்படி, மிசோரம் மாநிலத்திற்கு நவம்பர் 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சத்தீஷ்கார் மாநிலத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல், மத்தியபிரதேசத்திற்கு நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானுக்கு நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவுக்கு நவம்பர் 30ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலை மாற்றியமைத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, நவம்பர் 25-ந்தேதிக்கு ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
காரணம் என்ன?
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி மாற்றத்திற்கான காரணம் வெளியிடப்பட்டு உள்ளது. நவம்பர் 23ம் தேதி முகூர்த்த நாள் என்பதாலும், மாநிலம் முழுவதும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவதாலும், அதேபோல் சமூகம் சார்ந்த பல விழாக்கள் அன்றைய தினம் நடைபெறுவதாலும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று நவம்பர் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.