June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் டாக்டர் வீட்டில் கொள்ளை 3 பேர் கைது 

1 min read

3 people arrested for robbery at Courtalam doctor’s house

21.10,.2023

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் டாக்டர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ஒரு காரையும் பறிமுதல் செய்தனர் 

தென்காசி மாவட்டம் குற்றாலம் இராமாலயம் காலனி பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் பிராந்தர் சக்கரபர்த்தி இவர் ஒரு தனியார்  மென்பொருள் நிறுவனத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றுள்ளார் 15 ஆம் தேதி இவரது வீட்டில் பூட்டை உடைத்து 115 கிராம் எடையுள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை யடித்துச் சென்றுள்னர்.

இது பற்றி குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.குற்றாலம்  போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு குறிப்பிட்ட கார் அடிக்கடி அந்த பகுதியில் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த கார் குறித்து விசாரணை மேற்கொண்டதில்  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மணி என்பவரது மகன் வேல்முருகன் (வயது 37) என்பவருக்கு சொந்தமான கார் என்பது தெரிய வந்தது

அவரிடம் நடத்திய விசாரணையில் வேல்முருகன் மற்றும் வீரவநல்லூர் மேல புதுக்குடி பகுதியைச் சார்ந்த தேவ சகாயம் என்பவரது மகன் டேனியல் பிரகாஷ் (வயது 38) வீரவநல்லூரை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் மந்திரமூர்த்தி (வயது 35) ஆகிய மூவரும் அந்தக் காரில் டாக்டர் வீட்டை நோட்டமிட்டது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் மூன்று பேர்களும் சிறையில் ஒன்றாக இருந்த நேரத்தில் நண்பர்களாக இணைந்துள்ளனர்.

மேலும் இவர்கள் 3 பேர்களும் சேர்ந்து குற்றாலம் டாக்டர் வீட்டில் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

அந்த 3 பேர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.