‘சிவக்குமார் தனியாக காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வரவில்லை”-கர்நாடக மந்திரி பேச்சால் பரபரப்பு
1 min read
‘Shivakumar alone did not bring the Congress party to power’-Karnataka minister’s speech stirs up excitement
22.10.2023
‘சிவக்குமார் தனியாக காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொணடு வரவில்லை” என்று கர்நாடக மந்திரி பேச்சால் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டி.கே.சிவகுமார்
கர்நாடக மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை நீக்கி காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. சித்தராமையா முதல் மந்திரயாக பதவி ஏற்ற நிலையில், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
கர்நாடகாவில் பெற்ற வெற்றி, காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா அளவில் மிகப்பெரிய உத்வேகமாக பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநில வெற்றிக்கு டி.கே. சிவக்குமாரின் உழைப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர் மீது வருமானத்து அதிகமாக சொத்து குவித்த வழக்கு உள்ளது. இந்த வழக்கு அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநில மந்திரி சதிஷ் ஜராகிகோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் ”சிவக்குமார் தனியாக காங்கிரஸ் கட்சியை ஆட்சி அதிகாரத்திற்கு கொணடு வரவில்லை” எனக் கூறியிருந்தார்.
இதுகுறித்து டி.கே. சிவக்குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில் ”கட்சியில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட விவகாரம், அரசு தொடர்புடைய விவகாரம் குறித்து எம்.எல்.ஏ.-க்கள் முதலமைச்சர் மற்றும் என்னிடம் ஆலோசிக்க முடியும். ஆனால், அவர் எந்தவொரு காரணத்திற்காகவும், மீடியா முன் பேசியிருக்கக் கூடாது. கட்சி தொண்டர்கள், நாங்கள், நீங்கள், நாட்டின் மக்கள் ஆகியோரால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. இன்று, நாளை, ஒருபோதும், என்னால்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது எனக் கூறமாட்டேன்” என்றார்.