கோவிந்தப்பேரி ஊராட்சி யில் புதிய சாலை திறப்பு விழா
1 min read
New road opening ceremony in Govindapperi panchayat
24.10.2034
கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் ரூபாய் 9.10 லட்சம் செலவில் போடப்பட்ட புதிய சிமெண்ட் சாலையை சாலையை கோவிந்தப்பேரி ஊராட்சி மன்றத்தலைவர் டி.கே.பாண்டியன் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாங்கபுரம் காளியம்மன் கோவில் தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூபாய் 9.10 லட்சத்தில் புதியதாக போடப்பட்ட சிமெண்ட் சாலை திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கி அந்த சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவிந்தப்பேரி ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் எஸ்.இசேந்திரன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நாகராஜன் , சுகிர்தா ,ஊராட்சி செயலர் பா.மூக்காண்டி , டி.மாரித்துரை, குடிநீர் இயக்குபவர் டி.குமார், தூய்மை காவலர்கள்|, தூய்மை பணியாளர்கள் பி.முப்புடாதி,அழகையா,முருகையா, சுப்பிரமணியன், கணபதி, சீவலமுத்து, .இளைஞர்கள் மற்றும் இராஐாங்கபுரம் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கோவிந்தப்பேரி ஊராட்சி செயலாளர் பா.மூக்காண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்