June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

1 min read

2 arrested in Tenkasi gangster case

18.11.2023
தென்காசியில் தென்பழனி ஆண்டவர் கோவில் பின்புறம் உள்ள படித்துறையில் துறவி ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பான விசாரணையில் முகமது அலி மற்றும் சுடலைக்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரன்படி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், கொலையாளிகள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைத்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *