தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று
1 min read
In Tamil Nadu today, 16 people are infected with corona virus
16.12.2023
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை)ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மருத்துவத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: இன்று (16 ம் தேதி) ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை-18, கோவை-7, திருவாரூர், திருவள்ளூர் தலா -4, குமரி-3 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.மேலும் இன்று (16 ம் தேி) 309 பேர்கள் வரையில் பரிசோதிக்கப்பட்டனர்.
இவ்வாறு மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது