சங்கரன்கோவிலில் புத்தகக் கண்காட்சி
1 min read
Book fair at Sankarankovil
25/12/2023
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி, தென்காசி மாவட்டத்தில் 2-வது பொதிகை புத்தக கண்காட்சி சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது,
புத்தகக் கண்காட்சியை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்தி ரன் தொடங்கி வைத்து பேசிய போது,
இந்த புத்தக கண்காட்சியில் ஏராளமான பள்ளி , கல்லுாரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் புத்தகத்தினை வாங்கி வாசிப்பின் முக்கியத்துவத் தினை அறிந்து கொண்டு புத்தகத்தை வாங்கி பயன்பெற வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புத்தககண்காட்சி தொடர்ந்து வரும் 02.01.2024 தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.