குற்றாலம் கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா
1 min read
Theppa Utsava Festival at Courtalam Temple
28.1.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றால நாதர் கோயிலில் தெப்ப உற்சவ திரு விழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ திருவிழா நடத்துவது வழக்கம் இந்த ஆண்டு திருவிழா நேற்று இரவு நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை யில் குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள், திருவிலஞ்சிக் குமரன் வள்ளி, தெய்வானை மேளதாளங்கள் முழங்க சித்திரசபைக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாரா தனை நடந்தது. தொடர்ந்து சித்திர சபைக்கு எதிரில் உள்ள தெப்பத்தில் சுவாமி, அம்பாள், திருவிலஞ்சிக்குமரன், வள்ளி, தெய்வானை எழுந்தருளி நீராழி மண்டபத்தை 11 முறை சுற்றி வலம் வரும் வைபவம் நடந்தது.பூஜைகளை பிச்சுமணி என்ற கண் ணன் பட்டர், கணேசன் பட்டர், ஜெய மணி சுந்தரம் பட்டர், மகேஷ் பட்டர், ஒதுவார் சங்கரநாராயணன் ஆகியோர் நடத்தினர். சிவனடியார்களின் சிவபூத கண வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. விழாவில் கோயில் மணியம் சுப்பிரமணி யன், திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், முன் னாள் அறங்காவலர் வீரபாண்டியன், அகஸ்தியர் சத்சன்மார்க்கசபை முத் துக்குமாரசாமி, வர்த்தக சங்க தலைவர் காவையா, செயலாளர் அம்பலவாணன், பொருளாளர் வேல்ராஜ், பண்டாரசி வன், ஒன்றிய திமுக முன்னாள் செயலாளர் பா.இராமையா (எ) துரை, திமுக பேரூர் செயலாளர்கள் குற்றாலம் குட்டி, மேலகரம் சுடலை. வர்த்தக அணி கண்ணன், சோமசுந்தரம். அனந்த நாராயணன், வனராஜன், மிசா சண்முகம், சுரேஷ், தொமுச மாரியப்பன். வடகரை ராமர், அருண். ஓபிஎஸ் அணி பேரூர் செயலாளர் சாலுக்குட்டி பாண் டியன், வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், துரை, மணி, பாஜ ஊடக பிரிவு செந்தூர்பாண்டியன், திருமுருகன், பிலவேந்திரன், ஈஸ்வரன், நாராயணன், சர்வோதயா கண்ணன், மற்றும் கோயில் பணியாளர்கள் உட்பட திரளான பக்தர் கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணை ஆ யர் ஜான்சிராணி மற்றும் திருக்கோவில் எரிந்து கொ பணியாளர்கள் செய்திருந்தனர்.