பாவூர்சத்திரம்: மாணவி க்கு பாலியல் தொந்தரவு- கல்லூரி போக்சோவில் கைது
1 min read
Sexual harassment of a student near Tenkasi-Talarar arrested in Bokso (11.2.2024)
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் தனியார் டிப்ளமோ நர்ஸிங் பாரா மெடிக்கல் கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட கல்லூரியின் தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.. மேலும் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப்படி கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்திரம் பகுதியில் தென்காசி – நெல்லை சாலையில் ஔவையார் அரசு மகளிர் பள்ளி எதிரே தனியார் டிப்ளமோ நர்ஸிங் பாரா மெடிக்கல் கல்லூரி உள்ளது..இங்கு 80 க்கும் மேற்பட்ட மாணவிகள் டிப்ளமோ நர்சிங், லேப் டெக்னிஷியன் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியை பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பகுதியை சேர்ந்த சேர்ந்த திருமலைபாண்டி என்பவரது மகன் வினோத் குமார் ( வயது 32) என்பவர் நடத்தி வருகிறார். இவர் இப்போது பாவூர்சத்திரம் மின்வாரிய காலணியில் குடியிருந்து வருகிறார்.
இவரது கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவிக்கு வினோத்குமார் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி அந்த மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள்
ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வினோத்குமாரை போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் வினோத் குமார் அந்த மாணவியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரிய வந்தது.
உடனடியாக ஆலங்குளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். அதனைத் தொடர்ந்து அவரை தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் நீதிபதி அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.அதன்படி போலீசார் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து
தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் பொறுப்பு அனிதா,மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, தாசில்தார் பட்டமுத்து, ஆலங்குளம் மகளிர் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருண் பிரசாத், வருவாய் ஆய்வாளர் சுடலைமுத்து, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் மற்றும் பாவூர்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ் ஆகியோர் பாரா மெடிக்கல் கல்லூரியை ஆய்வு நடத்தி சீல் வைத்தனர்.
அந்தக் கல்லூரியில் படித்த மாணவிகள் படிப்புகளை தொடர வேறு கல்லூரிக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.