தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி மகப் பெருவிழா
1 min read
Masi Makhap Festival at Tenkasi Kashiviswanatha Swamy Temple 14.2.2024
தென்காசி மாவட்டம் தென்காசியில் உள்ள புகழ்பெற்ற காசி விசுவநாதர் சுவாமி கோவிலில் மாசி மகப் பெருவிழா 15.02.2024 காலையில் கொடியேற்றத் துடன் துவங்கி 24.02.2024 முடிய நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோவில் அருள்தரும் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் திருக்குற்றாலத்திற்கு அருகில் மூர்த்தி -தலம்- தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புகளை உடையது. வடக்கே வடகாசி, நடுவே சிவகாசி, தெற்கே தென்காசி என்பது முதுமொழி செண்பக மரத்தை தல விருட்சமாக கொண்ட இத்த திருக்கோவில் நாரதர், கௌசிகர் மிருகண்டு கண்வர் ஆகிய முனிவர்கள் வழிபாடு செய்த தலம் ஆகும் மாமன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட பழமையான திருக்கோவிலில் உயிர் ஓவியம் போன்ற சிற்பங்கள் திருஓலக்க மண்டபத்தை அலங்கரிக்கின்றன.
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் மாசித்திருவிழா 15.02.24 வியாழக்கிழமை காலை 5.20 மணிமுதல் 6.20 மணிக்குள் திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 15.02.2024 ஒன்றாம் திருநாள் நிகழ்ச்சி தென்காசி பிராமணர் சமுதாயம் சார்பிலும்,16.02.2024 ஆம் தேதி இரண்டாம் திருநாள் நிகழ்ச்சி தென்காசி பெ செந்தில் குமார் நாயுடு சார்பிலும், 17.02.2024 ஆம் தேதி மூன்றாம் திருநாள் நிகழ்ச்சி தென்காசி வட்டார யாதவ சமுதாயம் சார்பிலும், நான்காம் திருநாள் நிகழ்ச்சி 18.02.2024 அன்று தென்காசி வட்டார சைவ வேளாளர் சமுதாயம் சார்பிலும், 5ஆம் திருநாள் நிகழ்ச்சி 19.02.2024 திங்கள்கிழமை தென்காசி விஸ்வகர்மா ஐந்தொழிலா ளர் சமுதாயம் சார்பிலும், ஆறாம் திருநாள் 20 2 2024 செவ்வாய்க் கிழமை தென்காசி வட்டார தேவேந்திரகுல வேளாளர் வெள்ளாளர் சமுதாயம் சார்பிலும்,, ஏழாம் திருநாள் நிகழ்ச்சி 21.02.2024 புதன்கிழமை அன்று தென்காசி வட்டார தேவர் சமுதாயம் சார்பிலும், எட்டாம் திருநாள் நிகழ்ச்சி 22.02.2024 அன்று தென்காசி வணிக பெருமக்கள் சார்பிலும், ஒன்பதாம் திருநாள் 23.02.2024 மேலப் புலியூர் வணிக வைசிய வைசியர் சமுதாயம் சார்பிலும், அன்று காலை 09.30 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.பத்தாம் திருநாள் நிகழ்ச்சி 24.02.2024 சனிக்கிழமை அன்று தென்காசி நாடார் சமுதாயம் சார்பிலும் நடைபெற உள்ளது .
தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் நடைபெற உள்ள மாசி மக திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் ம அன்புமணி உதவி ஆணையர், தக்கார் சு.கவிதா, உதவி ஆணையர் கு.கோமதி, கோவில் செயல் அலுவலர் இரா.முருகன் தென்காசி ஆய்வர் வ.சரவணகுமார் மற்றும் கோவில் அலுவலர்கள் மற்றும் அனைத்து சமுதாய மண்டக படிதாரர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.