June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தேன்பொத்தையில் மனுநீதி நாள் முகாம்- ஆட்சியர் பங்கேற்பு

1 min read

Human Justice Day Camp at Dhenbothai–Tenkasi District Collector participation

15.2.2024
செங்கோட்டை வட்டத்திற்குட்பட்ட தேன்பொத்தை கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 100 பயனாளிகளுக்கு ரூ.4,36,020ம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திற்குட்பட்ட தேன்பொத்தை கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, ஒவ்வொரு மாதமும் மாவட்டத்திலுள்ள ஒரு வட்டத்தை தேர்வு செய்து மிகவும் பின்தங்கிய கிராமங்களில், அந்த கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகளையும், தேவைகளையும் நிறைவேற்றும் வண்ணம் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
செங்கோட்டை வட்டத்தில் மொத்தம் 19 கிராமங்களில் தேன்பொத்தை கிராமத்தை தேர்வு செய்து ஒரு மாதத்திற்கு முன்பே மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட 254 மனுக்களில் 163 மனுக்கள் தீர்வு காணப்பட்டு ஏற்பளிக்கப்பட்டது.
மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ள கிராமங்களில் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு ருனுஐனு அட்டைகள் மற்றும் அவர்களுக்குரிய நலத்திட்டங்கள் அனைத்துவகையான நிலம் தொடர்பான பிரச்சனைகள்இ வேலைவாய்ப்பற்ற தகுதியான இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, தூய்மைப்படுத்துதல் பணி, திடக்கழிவு மேலாண்மை, மரம் நடுதல், பழுது நீக்கம் செய்யப்பட வேண்டிய அங்கன்வாடி மையங்களை புனரமைப்பு செய்தல், நீர் நிலைகளை தூர்வாருதல், வரும்முன் காப்போம் திட்டம், கால்நடை பாதுகாப்பு, மக்களைத் தேடி மருத்துவம், மண் பரிசோதனை திட்டங்கள், புதிதாக சுய உதவிக்குழுக்கள் உருவாக்குதல், வாழ்வாதார திட்டங்கள், கண் பார்வை குறைபாடு தொடர்பான பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
மேலும் விளிம்பு நிலை மக்கள், பழங்குடியின மக்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை, அவர்களது குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், இலவச தையல் மிஷின் வழங்கும் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், பிஎம் கிசான், கலைஞரின்
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் பொதுமக்களான நீங்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் என பேசினார்.
இம்முகாமில் வருவாய்த் துறையின் மூலம் 11 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும், 41 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும், 30 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மற்றும் நத்தம் காலி மனை பட்டா மாற்றத்திற்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு பரப்பு திருத்தத்திற்கான ஆணையினையும், 1 பயனாளிக்கு பிறப்பு சான்றிதழ் பெயர் திருத்தம், 1 பயனாளிக்கு பிறப்பு பதிவேட்டில் தந்தை பெயர் திருத்தம், 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் ஆணையினையும் 1 பயனாளிக்கு ருனுசு திருத்த ஆணையினையும் என 91 பயனாளிகளுக்கு ரூ.3,50,000ம் மதிப்பிலான பட்டாக்களுக்கான ஆணையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ,24,000ம்- முதியோர் உதவித் தொகைக்கான ஆணையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.13, 500ம்- மதிப்பிலான மூன்று சக்கர வண்டியும், 1 பயனாளிக்கு ரூ.8,500 மதிப்பிலான சக்கரநாற்காலியும் வேளாண்மைத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.840ம் மதிப்பிலான தார் பாயினையும், 1 பயனாளிக்கு ரூ.150ம் மதிப்பிலான உயிர் உரத்தினையும், 1 பயனாளிக்கு ரூ.1,040ம்- மதிப்பிலான உழுந்து பயிரினையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ14,00ம் மதிப்பிலான பலா ஒட்டுக் கன்றுகளையும், 1 பயனாளிக்கு ரூ.20,000ம் மதிப்பிலான தக்காளி குழித்தட்டு நாற்றுகளையும் என மொத்தம் 100 பயனாளிகளுக்கு ரூ.4,36,020ம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
முன்னதாக மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சியினையும், தோட்டக்கலை துறை வேளாண்மை துறை, மற்றும் பல்வேறு துறைகளின் மூலம் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தி.உதய கிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா, தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் எம்.திவான் ஒலி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குருவம்மாள், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆதிநாராயணன், செங்கோட்டை வட்டாட்சியர் மணிகண்டன், துணை வட்டாட்சியர் ராஜாமணி, தேன்பொத்தை பஞ்சாயத்து தலைவர் ஜாபர் அலி, துணைத் தலைவர் பார்வதி. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கலாநிதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.