June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் வருவாய்த் துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்

1 min read

Tenkasi revenue officials go on hunger strike

15.2.2025
தென்காசி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்ட முடிவின் அடிப்படையில் வருவாய்த்துறை அலுவ லர்களுக்கு மேம்பட்ட ஊதியம் வழங்க வேண் டும் பட்டதாரி அல்லாதவரின் பதவி உயர்வை உத்த ரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் உள் ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் உண் ணாவிரதம் மற்றும் தற்செ யல் விடுப்பு எடுத்து போராட்ட நடத்திட வேண்டுமென அறிவித்தனர்.

அதன்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு மாவட்டத் தலைவர் மாடசாமி தலை மையில் திரளான அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்ட்த்திற்கு மாவட்ட துணைத் தலை வர்கள் விஜயகுமார், கணேசன், வேல்முருகன், மாவட்ட இணை செயலா ளர்கள் ராஜாமணி, கற்பக ராஜ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் இசக்கி துரை வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய் வூதியர் சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன் துவக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு வரு வருவாய்த் துறை அலுவலர் சங்க

மாவட்ட செயலாளர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

அப்போது வருவாய் மற் றும்பேரிடர்மேலாண்மை துறையில் மூன்று ஆண்டு களுக்கு மேலாக காலியாக உள்ளஅலுவலக உதவியா வர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண் டும் அனைத்து வட்டங்க ளிலும் சான்றிதழ் வழங் கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடி யாக ஏற்படுத்தித் தர டும் புதிய பென் வேண்டும் ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் 2024 பாராளு மன்றத் தேர்தல் பணி களை தொய்வின்றி மேற் கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன டியாக வழங்கிட வேண் டும் உங்கள் ஊரில் உங் களை தே தேடி மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்டப் பணிகளில் உள்ள அதிக பணி நெருக்கடியை தவிர்த்து திட்ட பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். வரு வாய்த்துறை அலுவலர்க ளின் இந்த திடீர் போராட் டத்தால் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் வெறிச் சோடி காணப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங். தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பொது செயலாளர் கனக ராஜ், தமிழ்நாடு வேலை வாய்ப்பு துறை ஊழியர் சங்க பொதுசெயலாளர் பூபதி உட்பட பலர்கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.