தென்காசி எஸ்.பி – கலெக்டரிடம் துப்பாக்கி கேட்ட அரசு மருத்துவர்
1 min read
Tenkasi SB – Government doctor who asked the Collector for a gun
17.2.2024
தென்காசி மாவட்டம்,
சங்கரன்கோவில் அருகே அரசு மருத்துவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தனது உயிரை பாதுகாக்க கலெக்டர் மற்றும் எஸ்பி யிடம் துப்பாக்கி கேட்ட அரசு மருத்துவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடநத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அரசு மருத்துவராக மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். அரசு மருத்துவர் முத்துக்குமாருக்கு அவருடைய கிராமத்தை சார்ந்தவர்களும் உறவினர்களும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அதனால் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் இயற்கை பேரிடர் காலங்களிலும், கொரோனா காலத்திலும் பல்வேறு உயிர்களை காப்பாற்றிய அரசு மருத்துவராகிய தனது உயிருக்கு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. எனவே தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள துப்பாக்கி வைப்பதற்கான உரிமம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அனுமதி கேட்டு அரசு மருத்துவர் முத்துக்குமார் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அரசு மருத்துவர் முத்துக்குமாரின் தாத்தா மரிய மனோகரன் என்பருக்கு சொந்தமான நிலத்தில் வேலி அமைத்தது தொடர்பாக அருகில் உள்ளவர்கள் மருத்துவரின் அம்மாவை தாக்கி வேலியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதனால் பலத்த காயமடைந்த மருத்துவரின் தாய் முத்தம்மாள் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே போல் கடந்த மாதம் திமுக பெண் கவுன்சிலர், அவருவடைய கணவரும் சேர்ந்து மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகதார நிலையில் பணியில் இருந்த மருத்துவர் முத்துக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சிகளும் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி, சொக்கம்பட்டி காவல்நிலையத்தில் மருத்துவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாணையும் நடந்தது.
இந்நிலையில் மேற்படி நபர்கள் தொடர்ந்து என்னையும் எனது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருகிறார்கள் எனவே அவர்களிடமிருந்து என்னையும் என்னுடைய குடும்பத்தையும் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு என்னை என் குடும்பத்தையும் தற்காத்துக் கொள்ள எனக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோ பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது