June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லை பாராளுமன்ற தொகுதியை த.மா.கா விற்கு ஒதுக்க கோரிக்கை

1 min read

Demand for allotment of Nellie parliamentary seat to DMK

20.2.2024
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என த.மா.கா.நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நெல்லை வண்ணாரப் பேட்டையில் நடைபெற்றது

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நெல்லை மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுத்தமல்லி முருகேசன், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் வீரமாரிதுரை, தென்காசி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அய்யாதுரை பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் என்.டி.எஸ். சார்லஸ், சிந்தா சுப்பிரமணியன், சரவணன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் வேட்பாளராக திருநெல்வேலி தென்காசி மாவட்ட பகுதிகளில் நீண்ட கால அரசியல் வாதியும்,தொடர்ந்து பல்லாண்டு காலமாக மக்கள் பணியாற்றும், பாரம்பரியமிக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளருமான என் டி எஸ் சார்லஸ் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்தத் தீர்மானங்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசனுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன் னகை, சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் ரமேஷ் செல்வன், நிர்வாகிகள் பாத்திலிங்கம் பாறை சண்முகம், பேட்டை ராமகிருஷ்ணன், வட் டார தலைவர்கள் திருமலை முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.