தென்காசியில்தமிழ் வளர்ச்சி துறை மூலம் ஆட்சி மொழி பயிலரங்கம்
1 min read
Official Language Workshop by Tamil Development Department in Tenkasi
21.2.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கலைஞர் கருணாநிதி ஆட்சிமொழி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்வளர்ச்சித்துறை மூலம் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. எ.கே.கமல் கிஷோர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதன் மூலம் தமிழ் ஆட்சி மொழி என்பது நிருவாக மொழியாகும். நிருவாகத்தில் மக்களுக்குத் தெரிந்த மொழியாக இருப்பதற்கு வழிவகை ஆட்சி மொழிச் செயலாக்கம் என்பது நிருவாகத்தில் கையொப்பம், பதிவேடுகள். பயணநிரல், நாட்குறிப்பு. கடிதங்கள் முத்திரைகள் போன்றவற்றில் தமிழில் எழுதுவதும் பராமரிப்பதுமாகும்.
தமிழ்வளர்ச்சிக்கென அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதும் பணியாளர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை. கட்டுரை. பேச்சுப்போட்டிகள் நடத்துதல்,
பணியாளர்களுக்கு பயிற்சியளித்திட திட ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதுதல் பாராட்டுப் பரிசு, தமிழில் சிறந்த நூல்களை வெளியிடுபவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்க சொல்வங்கித் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில் கோப்புகளை எழுத வேண்டும். தமிழ் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தை அனைத்து துறைகளிலும், முழுமையாகச் செயல்படுத்துவது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற நம் அனைவரின் கடமையாகும்.
தொடர்ந்து இப்பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நாளையும் நடைபெற உள்ளது. எனவே அலுவலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டலத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் வ.சுந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூர் தமிழ்த்துறை தலைவர்.பா.அருள் மனோகரி, மதுரை உலகத்தமிழ்ச் சங்க மேனாள் இயக்குநர் (கூ.பொ) பசும்பொன். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் க.அ.முகம்மது ரியாசுதீன் திருநெல்வேலி மண்டிலத் தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் செ.சீலா செபரூபி. செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவிமக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள். கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.