June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கவிதை போட்டி- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

1 min read

Voter Awareness Poetry Competition in Tenkasi District- District Collector Announcement

9.4.2024
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கவிதை போட்டி நடைபெற உள்ளது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகின்ற மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வாக்காளர் விழிப்புணர்வு கவிதை போட்டி வரும் வெள்ளிக்கிழமை (12-04-2024) அன்று கடையநல்லூர் அரசுக்கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது.

போட்டி தலைப்பு (ஏதேனும் ஒன்று)

  1. தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா
  2. எனது வாக்கு விற்பனைக்கு அல்ல 3. எனது ஓட்டு எனது உரிமை

போட்டிக்கான விதிமுறைகள்

  1. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அனைவரும் பங்கேற்கலாம்
  2. 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளராக இருத்தல் வேண்டும். உச்சபட்ச வயது வரம்பு இல்லை
  3. கவிதை புதுக்கவிதை அல்லது மரபுக்கவிதையாக இருக்கலாம்
  4. 30 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  5. முதல் மூன்று நபர்களுக்கு மட்டும் பரிசுகள் வழங்கப்படும்.பங்கேற்பாளர்களுக்கு

சான்றிதழ் வழங்கப்படும் 6. போட்டி நாளன்று நேரில் கவிதைகளை சமர்ப்பிக்க வேண்டும். உடனடியாக பரிசீலிக்கப்பட்டு பரிசுகள் அறிவிக்கப்படும்

  1. போட்டிக்கான முன்பதிவு அவசியமில்லை. போட்டி நாளன்று காலை 10 மணிக்கு

நேரில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம். 8. கவிதையில் மதம் அரசியல் மற்றும் தனிநபர் சார்ந்த கருத்துக்கள் ஏதும் இருக்க

கூடாது

  1. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது

இக்கவிதை போட்டியில் அனைத்து வாக்காளர் பெருமக்களும் பெருந்திரளாக பங்கேற்குமாறு தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான.ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.