July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

சவுக்கு சங்கர் பேசியது பெண் சமுதாயத்தை பாதித்துள்ளது- நீதிமன்றத்தில் காரசார விவாதம்

1 min read

Chavku Shankar’s speech has affected the women’s society – a heated debate in the court

17.5.2024
சவுக்கு சங்கர பேசியது காவலரை மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையே பாதித்துள்ளது என திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்துள்ளது.

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் வழக்கில் தொடர்புடைய நபர்களை கண்டிறிய முடியும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்தபோதுகூட போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது என்று குறிப்பிடப்பட்டது.

ஒரு லட்சம் போலீசார் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவரும் புகார் அளித்தால் எப்ஐஆர் போட்டு விசாரிப்பார்களா ? என்று சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடந்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை கைப்பறறப்பட்ட பிறகு திருச்சியில் எதற்காக போலீஸ் கஸ்டடி கேட்கிறார்கள் ? என சவுக்கு சங்கர் தரப்பு கூறப்பட்டது.

இதைதொடர்ந்து, பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி திருச்சி மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி ஜெயப்பிரதாக உத்தரவிட்டுள்ளார்.

சவுக்கு சங்கருக்கு ஏற்கனவே ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி இருந்த நிலையில், தற்போது வேறொரு வழக்கில் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.