June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருவிகள் பராமரிப்பை வனத்துறையிடம் ஒப்படைக்கக்கூடாது- பழனிநாடார் கோரிக்கை

1 min read

Courtalam waterfalls should not be handed over to forest department – Palani Nadar demands

23.5.2024
தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குற்றால அருவிகள் பராமரிப்பு மற்றும் நிர்வாகங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது என்று தமிழக முதல்வர். தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
குற்றாலம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட பல அருவிகள் உள்ளன.

சீசன் காலத்தில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீராட தமிழ் நாடு மட்டுமின்றி கேரளா. கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 17ம்தேதி மதியம் பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நெல்லையை சேர்ந்த பிளஸ்1 மாணவர் அஸவின் (17), தண்ணீரில் அடித் துச் செல்லப்பட்டு பரிதாப மாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் மறுஉத்த ரவு வரும் வரை குளிக்கத்தடை விதிக்கப்பட் டுள்ளது.

குற்றாலத்தில் பழைய அருவி, ஐந்தருவி மற்றும் மெயின் அருவிக ளின் பராமரிப்பு நிர்வாகத்தை மாவட்டநிர்வாகம், வனத்துறை வசம் ஒப்படைக்க இருப்பதாக வும், வனத்துறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்ததாகவும் அறிந்தேன். ஏற்கனவே வனத்துறை யினர் கட்டுப்பாட்டில் நெல்லை மாவட்டம் மணி முத்தாறு அருவி, அகஸ்தி யர் அருவி உள்ளிட்ட பல அருவிகள் உள்ள நிலையில் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கடும் கெடுபிடி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவி நிர்வாகங்கள் வனத்துறை வசம் ஒப்ப டைக்கப்பட்டால், தற்போ தைய நிலையில் இருந்து என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு சிற்றருவியும், மணிமுத்தாறுஅருவியும், பாபநாசம் அகஸ்தியர் அருவிகளும் முன்மாதிரியாக உள்ளது. குற்றாலத்தில் ஆண்டுக்கு 75 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்
எந்தவித கட்டணமும் இல்லாமல் சுதந்திரமாக சுதந்திரமாக அரு விகளில் நீராடி வரும் நிலையில் வனத்துறை வசம் ஒப்படைத்தால் வனத்துறை அனுமதி இருந்தால் மட்டுமே அருவிகளுக்கு செல்ல முடியும். மேலும் அருவிகளில் குளிக்க கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.

குற்றாலத்தை பொருத்த வரை அங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பி சுமார் பத்தாயிரம் குடும்பங்கள் வியாபாரம் செய்து வரு கின்றன. இதனால், குற்றால அருவிகள் வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் சென் றால் இவர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் மிகவும் கேள்விக்குறியாகும்.

எனவே தாங்கள் உள்ளூர் வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி எக்காரணத்தை கொண்டும் குற்றாலத்தில் உள்ள அருவிகளை வனத்துறையி டம் ஒப்படைக்க அனுமதி வழங்கக்கூடாது என
கேட்டுக்கொள்கிறேன்.

இதுகுறித்து வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் விரிவாக எடுத்துரைக்கவும் தயாராக உள்ளேன்.
இவ்வாறு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.