ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஒன்று கூடும் விழா
1 min read
Gathering of differently abled people in Aayikudi Amar Seva Sangam
23.6.2024
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் மூலம் மறுவாழ்வு மற்றும் தொழிற்கல்வி பெற்று சென்றவர்களின் வருடாந்திர ஒன்று கூடும் விழா 17.5.24 முதல் 19.5.24 வரை 3 தினங்கள் ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தில் வைத்து நடைபெற்றது.
இவ்விழாவில் 100-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களில் பழுதுகளை சரி செய்தல், அவர்களுக்கு தேவையான உபகரணங்கள். தேவையான மருந்து மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனைப்படி வழங்கப்பட்டது. 18.5.24 அன்று அருகாமையிலுள்ள பாபநாசம் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டது. 19.5.24 அன்று பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, பாட்டு போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. 19.5.24 அன்று நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் ஆய்க்குடி அமர்சேவா சங்க பொருளாளர் டி.வி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாற்றுத்திறன் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. செயலாளர் எஸ்.சங்கரராமன் அவர்கள் அவசர அவசியத்தை முன்னிட்டு வெளியூர் சென்றுள்ளதால் காணொளி மூலம் நாம் அனைவரும் லஞ்ச லாவண்யம் இல்லாமல் நேர்மையாக வாழ்ந்து எத்தகைய சவால்கள் வந்தாலும் நன்முறைகளை பின்பற்றி வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் என்றும், நேர்மையாக வாழ்ந்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்ப்போம் என்று அறிவுரைகளும், வாழ்த்துக்களும் தெரிவித்தார். கமிட்டி உறுப்பினர் எஸ்.பட்டம்மாள் மற்றும் அலுவலக மேலாளர் கிருஷ்ணபிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களும் வழங்கப்பட்டது.
தலைமை விருந்தாளி டி.வி.சுப்பிரமணியம் மாற்றுத்திறனாளிகள் தொழில் மற்றும் கல்வி சிறக்க பொது அறிவை வளர்த்து கொள்வது அவசியம் என்பதையும் எடுத்துரைத்தார்கள். நிகழ்ச்சியை கீதா தொகுத்து வழங்கினார். ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். நேர்மையாக வாழ்ந்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்ப்போம் என்று சபதம் ஏற்றுக் கொண்டார்கள்.நிகழ்ச்சியின் முடிவில் வார்டன் பானுமதி அனைவருக்கும் நன்றி கூறினார்.