6-ம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2024/05/வாக்குப்பதிவு.jpg)
Vibrant voting in Phase 6 elections
25.5.2024
ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு, ஆறாம் கட்ட லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை 11 மணி நிலவரப்படி, 25.76 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 36.88 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
நாட்டின் 18-வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது.மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில், பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதை அடுத்து, 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.இதுவரை நடந்த ஐந்து கட்ட தேர்தல்களில், 427 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவடைந்து உள்ளது.
இந்நிலையில், ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில், இன்று ஆறாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதன்படி, ஹரியானாவில் 10, ஜார்க்கண்டில் நான்கு. ஒடிசாவில் ஆறு.உ.பி.,யில் 14. பீஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா எட்டு மற்றும் யூனியன் பிரதேசங்களான டில்லியில் ஏழு, ஜம்மு – காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
ஆறாம் கட்ட லோக்சபா தேர்தலில், மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். முக்கிய வேட்பாளர்களில், ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியில் பா.ஜ.,வின் தர்மேந்திர பிரதான் தேர்தலை சந்தித்தார்.
இதேபோல் ஒடிசா சட்டசபைக்கான 42 தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஆர்வத்துடன் வந்து வாக்காளர்கள் வாக்களித்தனர்.
கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல், ஜூன் 1ம் தேதி நடக்கிறது. அப்போது, எட்டு மாநிலங்களில், 57 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜூன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.