பழைய குற்றாலத்தில் போலீசார் வாகன கெடுபிடி செய்வதாக ஆட்டோ ஓட்டுனர்கள் கலெக்டரிடம் புகார்
1 min read
Auto drivers complain to the collector that the police are tampering with vehicles in the old court
11.5.2024
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில்
வாகனங்கள் கட்டுப்பாடு என்ற பெயரில் போலீசார் செய்துவரும் கெடுபிடியால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக 50க்கும் மேற்பட் ட ஆட்டோ ஓட்டுனர்கள் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கி னர்.
பழைய குற்றாலம் அருவியில் கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் வெள் ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பழைய குற்றால அருவியில் மாவட்ட நிர்வாகம் சார் பில் பல்வேறு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிப்பதற் கான அனுமதி மற்றும் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் முன்னதாகவே நிறுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் உள்ளே நடை பயணமாக அனுமதிப் பது உள்ளிட்ட கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு புகார் மனு அளித்தனர். அதில், பழைய குற்றாலம் அரு வியை நம்பி தங்களது வாழ்வாதாரம் உள்ளது. பழைய குற்றாலம் கார் பார்க்கிங் முதல் அருவிக்கரை வரை ஆட் டோக்கள் சென்று வந் தன. தற்போது உள்ளே வாகனங்கள் அனுமதிக் கப்படாத நிலையில் வயதானவர்கள், ஊன முற்றவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தற்போது சீசன் கால கட்டங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். எனவே சுற்றுலா பயணிகளின் சிரமத்தை போக்குகின்ற வகையிலும், எங்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுக்கும் வகையிலும் மீண்டும் கார் பார்க்கிங் பகுதியிலிருந்து பழைய குற்றாலம் அருவிக் கரை வரை ஆட்டோ செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று கேட் டுக் கொண்டுள்ளனர்.
பழைய குற்றாலம் அருவி பகுதிக்கு செல்லும் பாதையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்துவதால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளில் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் அறிவிப்பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து வர முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த பிரச்சனைகள் தலையிட்டு வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பழைய குற்றாலம் அருவி பகுதி வரை செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.