கடையத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி அமைக்க கவுன்சிலர் மாரிகுமார் அமைச்சரிடம் மனு
1 min read
Councilor Marikumar petitioned the minister to set up a nursing training school in the shop
14/5/2024
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் செவிலியர் பயிற்சி பள்ளி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்தக் கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம் 11வது வார்டு கடையம் ஊராட்சிக்குட்பட்ட புது கிராம பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிரசவ பிரிவு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்தது பின்பு தரம் உயர்த்தப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் தற்போது செயல்பட்டு வருகிறது.
தற்போது பழைய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் எந்தவித பயன்பாடும் இன்றி அந்த கட்டிடம் பராமரிப்பு இன்றி தன் வலிமை மற்றும் தரத்தை இழந்து வருகிறது. மேலும் அந்தக் கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் குப்பை குளங்களாக மாறி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பாம்புகள் போன்ற விஷ பூச்சிகள் வாழக்கூடிய பகுதியாக மாறி உள்ளது. மேலும் சமூகவிரோதி களின் சமூகவிரோத செயலுக்கு கூடாரமாக மேற்கண்ட இந்த இடம் செயல்பட்டு வருகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயல்படாத அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அருகில் நான்கு புறமும் குடியிருப்பு பகுதிகள் இருந்து வருகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயல்படாத இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நான்கு புறமும் குடியிருப்பு பகுதிகள் இருந்து வருகிறது. தற்போது இப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் பராமரிப்பின்றி பாலடைந்த பழைய செயல்படாத அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் அருகில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த செயல்படாத அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்த செயல்படாத அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி தொடங்க நடவடிக்கை எடுப்பதாக தொடர்புடைய துறை இயக்குனர் கடிதம் வாயிலாக தெரிவித்தனர். தற்போது இந்நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
எனவே தாங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பழைய செயல்படாத பாலடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு அதிகாரிகள் தெரிவித்தவாறு செவிலியர் பயிற்சி பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடையம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை மனுவினை கடையம் ஊராட்சி ஒன்றிய காங்கிரஸ் கவுன்சிலர் மாரிகுமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்பு பொது செயலாளர் செ.ராம் மோகன், சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ ராஜசேகரன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனை நேரில் சந்தித்து அளித்தனர் .மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.