தோரணமலையில் விஷசாராய சாவு உள்பட கொடூர மரணங்கள் நிகழாமல் இருக்க கூட்டுப்பிரார்த்தனை
1 min read
A collective prayer to avoid the occurrence of cruel deaths including poisoned death in Thoranamalai
22.6.2023
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலையில் மாதந்தோறும் பவுர்ணமி காலையில் கிரிவலம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளவர். கிரிவலம் முடிந்ததும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெறும்.
அதேபோல் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் மலையை வலம் வந்தனர். கிரிவலம் முடிந்ததும் கூட்டுப்பிராத்தனை நடந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 55 பேர் இறந்தனர். இதுபோன்ற கொடூர மரணங்கள் இனி நடக்ககூடாது என்று கூட்டுப்பிரார்த்தனையில் வேண்டப்பட்டது.
மேலும் கூட்டுப்பிரார்த்தனையில் வைத்த வேண்டுதல்கள் வருமாறு:-
நாட்டில் நல்ல மழை பொழிந்திட, நாட்டு மக்கள் செழிப்புடன் வாழ அருள்வாய் முருகா; விவசாயம் தழைக்கவும் , விவசாயி செழிக்கவும் அருள்வாய் முருகா; நாட்டு மாணவச் செல்வங்கள் ஒழுக்கமுடன் வளர்ந்து வாழ்வில் பிறர்க்கும் உதவிகள் செய்து வாழ்ந்திட அருள்வாய் முருகா; நாட்டு தொழில் வளம் சிறப்பாய் திகழ்ந்து பொருளாதாரம் உயர்ந்திட அருள்வாய் முருகா; நாட்டு தொழில் வளம் பெருகுவதுடன் வேலை வாய்ப்பும் பெருகி வேலையில்லா திண்டாட்டத்தை நீக்கி கொண்டாட்ட வாழ்வு அருள்வாய் முருகா.
மேற்கண்டவாறு வேண்டுதல் முன்வைக்கப்பட்டது.
. கூட்டு பிரார்த்தனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது ; காலை, மதியம் அன்னதானம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.