June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் கோவில் இடத்தில் வாராங்கால் கட்டியதால் மோதல்

1 min read

Ayraperry Panj. The collector’s office was besieged to demand the release of the leader

22.6.2024
தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவரை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி ஆயிரப்பேரி ஊராட்சி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி ஊராட்சி மன்றம் பசும்பொன் நகர் பகுதியில் வாறுகால் அமைக்கும் பணியில் பஞ்சாயத்து சார்பில் ஈடுபட்ட போது குற்றாலம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாறுகால் கட்டிய போது பாட்டப்பத்து பகுதியை சேர்ந்த பாப்பையா தேவர் என்பவரது மகன் கோபிநாத் அங்கு பணி செய்யவிடாமல் தடுத்ததோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த பணியை தொடர்விடாமல் நிறுத்தினார்.

இதனால் அந்தப் பணி நிறுத்தப்பட்டது இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நேற்று கோபிநாத் தன்னோடு நான்கு நபர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு ஜேசிபி உதவியுடன் பஞ்சாயத்து வாறுகால் கட்டுவதற்கு தோண்டப்பட்ட இடத்தில் ஜேசிபி மூலம் அந்த பள்ளத்தை மூடியுள்ளார்.

இதையறிந்த ஆயிரப்பேரி பஞ்சாயத்து தலைவர் சுடலையாண்டி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது ஜேசிபி கொண்டு குழியை மூடக்கூடாது என்று கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபிநாத் மற்றும் வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் மற்றும் 3 பேர் பேர் சேர்ந்து பஞ்சாயத்து தலைவரை கீழே தள்ளியுள்ளனர்
இதனால் தகராறு ஏற்பட்டது இதில் கோபிநாத் சுடலையாண்டி இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது
இரு தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில் போலீஸ் தரப்பில் கோபிநாத் அவரது வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் மீதும் ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி அவரது மகன் திருப்பால் மருமகன் செல்வகுமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு தரப்பினரும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆயிரப்பேரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி இ.விஜயராணி தலைமையில் ஆயிரப்பேரி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டியை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து ஆயிரப்பேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இ.விஜய ராணி தலைமையில் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்கள். அந்த மனுவில் ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்காக வாறு கால் அமைக்கும் பணியில் தலைவர் சுடலையாண்டி ஈடுபட்டபோது ஏற்பட்ட தகராறு காரணமாக சுடலையாண்டி மீதும் அவரது மகன் மருமகன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே பொதுமக்களுக்காக பணிசெய்ய சென்ற ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

இதே கோரிக்கை அடங்கிய மனுவினை தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமாரிடமும் கொடுத்துள்ளனர். ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.