குற்றாலத்தில் விபச்சாரம்- கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது
1 min read
Prostitution in court- 3 persons from Kerala arrested
28.5.2024
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய கேரள மாநிலத்தைச் சார்ந்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.
குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள ஆர்ஜிபி ரிசாட்டில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள் அப்போது அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த 3 நபரகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அதன்பின் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் நந்தகுமார் (வயது 24), கோட்டயம் குதிரை சேர்ந்த ராஜப்பன் என்பவரின் மகன் அகில் (வயது 28) மற்றும் ஆலப்புழா பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகன் ஆனந்த் (வயது 28) என்பது தெரிய வந்தது உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு படி கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.