June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

1 min read

108 ambulance workers protest in Tenkasi

10.8.2024
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் மகேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கடந்த 2021-ம் ஆண்டு வரை 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தின் திட்ட இயக்குனர் முன்னிலையில் முறையாக நடந்து வந்த ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கான வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊதிய உயர்வை உயர்த்தி வழங்கிட வலியுறுத்தியும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மருத் துவமனைகளில் இருப்பிட வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட வைகளை செய்திடவும், மண்டல அதிகாரியின் நடவடிக்கை யால் பெண் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதால் உடனடியாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இதில் நெல்லை, தென்காசி, கன்னி யாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ட இருந்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.