செங்கோட்டை அரசு பள்ளியில் 15 மாணவிகள் திடீர் மயக்கம்- ஆஸ்பத்திரியில் அனுமதி
1 min read
15 girl students suddenly fainted in Sengottai Government School – admitted to hospital
10.8.2024
செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி கையில் வைத்திருந்த சென்ட் பாட்டில் உடைந்து அதிலிருந்து வெளிவந்த நெடியால் 15 மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் உள்ள எஸ்.ஆர்.எம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் 6 முதல் 12ம் வகுப்பு உள்ளது. இங்கு நூற்றுக்க ணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் பிளஸ் 2 கணக்கு- கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரி வில் சுமார் 55 மாணவிகள் பயில்கின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு மாணவி ஒருவர் வகுப்பறைக்கு கொண்டு வந்திருந்த அக் தர் சென்ட் பாட்டில் கை தவறி கீழே விழுந்து உடைந் தது. இதனால் வகுப்பறை முழுவதும் நெடி வீசிய தால் மாணவிகள் மூச்சுத் திணறல் மற்றும் அலர்ஜி யால் பாதிக்கப்பட்டனர். இதில் இருவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் வகுப்பறைக்கு வந்தனர். தொடர்ந்து சென்ட் பாட்டில் உடைந்த வகுப்ப றையில் மாணவிகள் அமர வைக்கப்பட்டனர். இதனால் 15 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்
டது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மதியம் 2 மணியளவில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு மேல் 7 மாணவிகள் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர்.
சென்ட் பாட்டில் உடைந்து நெடி வீசிய நேரத்திலிருந்து மாண விகள் வெளியே மைதா னத்தில் அல்லது வேறு வகுப்பறையில் அமர வைக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது. ஆனால் மாணவிகள் மீண்டும் அதே வகுப்பறையில் அமர வைக்கப்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது பற்றி தகவல் அறிந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கு சிகிச்சை பெறும் மாணவிகளை பார்வை யிட்டு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கு மாறு மருத்துவர்களை கேட்டுக் கொண்டார்.