தென்காசியில் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய – 3 பேர் கைது
1 min read
In Tenkasi, 3 people were arrested for celebrating their birthday by cutting a cake with a knife
22.8.2024
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி பகுதியில் நண்பனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பட்டாக்கத்தி மூலம் கேக் வெட்டி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட மூன்று பேர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி அரிகர விநாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் சுரேஷ் என்பவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் நண்பர்களுடன் சேர்ந்து பெரிய கத்தியை வைத்து கேக் வெட்டி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டார். அதன்படி தென்காசி ஹரிஹர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 37), அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகனான சக்திவேல் (வயது 25) மற்றும் பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் மாரியப்பன் (வயது 26) ஆகியோரை தென்காசி காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் அதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு படி அவர்கள் 3 பேர் களையும் போலீசார் சிறையில் அடைத்தனர்..