June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் தபசுகுமாரின் ஆய்வுக்கட்டுரை

1 min read

Tabasukumar’s Dissertation at the Palani Muthamil Murugan Conference

24-.8.2024
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது. நாளையும் மாநாடு தொடர்ந்து நடக்கிறது. இந்த மாநாட்டை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் பலரிடம் இருந்து ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டன. அந்தக் கட்டுரைகள் அனைத்தும் முருகன் தொடர்புடையாதாகும்.
அந்தக்கட்டுரைகளில் சிலவற்றை அந்த ஆய்வாளர்களைக் கொண்டு பல்வேறு ஆய்வரங்களி்ல் பேசப்பட்டன. அந்த வகையில் மாலைமலரில் செய்தி ஆசிரியராக இருந்து பணி நிறைவு செய்த வே.தபசுகுமாரின் ஆய்வுக் கட்டுரையும் இடம்பெற்றது. இவர் செய்திச் சாரலில் கதை கட்டுரைகள் எழுதி வருகிறார். கண்ணாயிரம் என்ற நகைச்சுவை கதையை அவர்தான் எழுதி வருகிறார்.
தபசுகுமார் “திருக்குறளில் திருமுருகன்” என்ற ஆய்வுக் கட்டுரை தேர்ந்து எடுக்கப்பட்டு அதை வாசிக்கவும் அனுமதிக்கப்பட்டது.
ஞானியார் சுவாமிகள் அரங்கத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சிக்கு சிவசண்முக ஆறுமுகம் மெய்ஞான சிவாச்சாரியார் சுவாமிகள் தலைமை தாங்கினார். திருநாவுக்கரசு நெறியாளராக இருந்தார். இதில் மொத்தம் 5 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
பிற்பகலில் பாலமுருகன் அடிமை சுவாமிகள் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. சத்தியமூர்த்தி நெறியாளராக இருந்தார். இதில் ஐந்தாவது நபராக வே.தபசுகுமார் தனது கட்டுரையை வாசித்து சமர்பித்தார்.
ஆய்வுக்கட்டுரை வாசித்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.