June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே ஆன் லைன் ரம்மியில் ரூ 6 லட்சம் இழந்த நிதிநிறுவன அதிபர் தற்கொலை

1 min read

Finance company president commits suicide after losing Rs 6 lakh in online rummy near Kadayam

27.8.2024
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன் பட்டியில் ஆன்லைன் ரம்மியில் ரூ 6 லட் சம் பணத்தை இழந்ததால் விரக்தி அடைந்த நிதி நிறுவன அதிபர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி மைலானூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ் என்பவரது மகன் சக்தி வேல் (வயது 31). டிப்ளமோ படித்துள்ள இவருக்கு அருணா என்ற மனைவியும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.சக்திவேல் கடையத்தில் பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனத்தில் பங்கு தாரராக இருந்து வந்தார்.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மியில் தீவிரம் காட்டிய சக்திவேல் ரூ 6 லட் சம் பணத்தை இழந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த நிதி நிறுவன அதிபர் சக்திவேல் விஷம்குடித்து மயக்கம் அடைந்துள்ளார்.
இதையறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சக்தி வேல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிந்து செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மியில் சக்திவேல் ரூ. 6 லட்சம் வரை இழந்ததாகவும் அதனால் விரக்தி அடைந்த சக்திவேல் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.