பழைய குற்றாலத்தை அபகரிக்க வனத்துறை முயற்சி – ஆட்சியரிடம் அனைத்துகட்சி முறையீடு
1 min read
Forest Department’s attempt to expropriate old court – All parties appeal to Collector
29.8.2024
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியை அபகரிக்க முயலும் வனத்துறை நடவடிக்கையை கண்டித்து அனைத்து கட்சியினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரே அம்சமாக திகழுவது குற்றாலம் அருவிகள் தான் இந்த குற்றாலத்தில் உள்ள அருவிகளில் பழைய குற்றாலம் அருவியும் ஒன்று ஆகும் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது நாடு முழுவதும் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காகவும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்காகவும் உருவாக்கப்பட்டது தான் பழைய குற்றாலம் அருவி ஆகும்.
சமீப காலமாக வனத்துறையினர் பழைய குற்றாலம் அருவியை அபகரிக்க கடும் முயற்சி செய்து வருகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட வனத்துறை அலுவலர் தன்னிச்சையாக பழைய குற்றாலம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து 60 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய குற்றாலம் அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மலைப்பகுதியில் உள்ள கால்வாய்களுக்கு செல்லும் விவசாயிகள், பழைய குற்றாலம் அருவி பகுதிக்கு மேலே உள்ள கன்னிமாரம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் என அனைவருக்கும் தடைவிதிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த தேனருவி செண்பகாதேவி அருவி பழததோட்ட அருவி சிற்றருவி உள்ளிட்ட அருவிகளை அபகரித்த வனத்துறை அந்த அருவிகளையெல்லாம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து விட்டனர். இப்போது பழைய குற்றாலம் அருவியையும் அபகரிக்க பெரும் முயற்சி செய்கிறார்கள்.
இதனை மாவட்ட நிர்வாகம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது. வனத்துறையினர் இந்த முயற்சியை கைவிடாவிட்டால் இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சர், மாவட்ட அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் வனத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர், ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த கோரிக்கை மனுவை நேரில் சென்று கொடுக்க இருக்கிறோம்.
மேலும் தேவைப்பட்டால் பொதுமக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்தவும் அனைத்து கட்சியினர் மற்றும் பழைய குற்றாலம் மீட்பு குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு. இராசேந்திரன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், தென்காசி மாவட்ட ஊராட்சிகள் துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம உதயசூரியன், தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் சுதா.பாலசுப்பிரமணியன், ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் தி.சுடலையாண்டி, தமிழர் விவசாயம் நீர்வள பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் டேனி அருள்சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இசக்கித்துரை, தென்காசி தாலுகா செயலாளர் கிட்டப்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் வேலு மயில், மத்திய குழு உறுப்பினர் சண்முகம், மாநில குழு உறுப்பினர் சுகந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பண்பொழி செல்வம், மதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் மருதசாமி பாண்டியன் மதிமுக வழக்கறிஞர் சுரேஷ் என்ற சுப்பையா, தென்காசி நகர மதிமுக செயலாளர் ஜி கார்த்திக், நடுவை முருகன், தென்காசி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் முகமது யாகூப், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல்முத்தலிப், ஆதி தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் தென்னரசு திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் எம் மகாலிங்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் முகமது முஸ்தபா,தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் முகைதீன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கூ சந்திரசேகர் ஆதி தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆதவன் அகில இந்திய பார்வர்டு பல கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தேவர் அதிமுக சார்பில் காஜா மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.