June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

புளியரை, மேக்கரை சாலைகளில் இரு மாநில போலீசார் வாகன சோதனை

1 min read

Two state police vehicles check on Puliarai and Makerai roads

13/9/2024
கேரளாவில் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகையானது. நாளை மறுநாள் (15-ந் தேதி) கேரளாவில் சிறப்பாக கொண்டா டப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி கேரளாவில் பொதுமக் கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், காய்கறி, பழங்கள் படைத் தும் வழிபாடு செய்வர்கள். மேலும் உறவினர்கள், நண் பர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடுவார்கள்.
அனைத்து மதத்தினரும் ஒருங்கிணைந்து கொண் டாடப்படும் இவ்விழா வெகுவிமரிசையாக இருக்கும். மேலும், தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழக பகுதிகளி லும், ஓணம் பண்டிகை யானது வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக் கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட் கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகி றது.
அவ்வாறு கொண்டு செல்லும் வாகனங்களில் ரேசன் அரிசி, கஞ்சா, மதுபானம் கடத்தப்படவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், பண் டி.கை காலங்களில் சட் டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையிலும், அசம்பாவிதங்கள் நிக ழாத வகையிலும், மது உள் விட்ட போதை பொருட் கள் கடத்திச்செல்வதை தடுக்கவும் காவல்துறை சார்பில் பல்வேறு பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. அதனைதொடர்ந்து, தமிழக போலீசாரும், கேரள போலீசாரும், ஒன்றிணைந்து தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை, மேக்கரை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து வாக னங்களும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாக னங்களும், முறையான சோதனைக்கு உட்படுத் தப்பட்ட பிறகே இருமாநி லங்களுக்கும் அனுமதித்து வருகின்றனர்.பாதுகாப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக, இது போன்ற சோதனைகளை இரு மாநில காவல்துறையும், இணைந்து மேற்கொண்டு வருவதாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.