பெத்தநாடார்பட்டியில் கபடி போட்டி
1 min read
Kabaddi match at Pethanadarpatti
1.9.2024
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார் போட்டியில் உலக சிட்டுக்குருவி தினத்தையொட்டி நடைபெற்ற கபடி போட்டியை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் துவக்கி வைத்தார்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டியில் உலக சிட்டுக்குருவி தினத்தையொட்டி 7 இளம்சிட்டு கபடி குழு சார்பில் 3ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்தப்போட்டியில், முருகன்குறிச்சி 7 இளம்சிட்டு அணி முதல்பரிசும், பெத்தநாடார்பட்டி அசத்தல் அணி 2வது பரிசும், திப்பணம்பட்டி சாரல் கபடி அணி 3வது பரிசும், மகிழ்வண்ணநாதபுரம் 7 டைகர் அணி 4வது பரிசும், முல்லை கிங்ஸ் அணி 5வது பரிசும், பூவை சிட்டி அணி 6வது பரிசும், வள்ளியூர் அணி 7வது பரிசும், முருகன்குறிச்சி 7 இளஞ்சிட்டு பி அணிக்கு 8வது பரிசும் பெற்றன.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற
பரிசளிப்பு விழாவில் பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், துணைத் தலைவர் ஜெயராணி அந்தோணி ராஜ், திமுக விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை 7 இளம் சிட்டு கபடி அணி வீரர்கள் செய்திருந்தனர்.