June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்கள் சந்தை படுத்துதல்

1 min read

Marketing of products produced by Women Self Help Group

14.10.2024
தென்காசி மாவட்டம்
வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக வாங்குவோர் விற்பவர் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக வாசுதேவநல்லூர் வட்டாரத்தில் மகளிர் சுய உதவிக் குழுவின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக வாங்குவோர் விற்பவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்யவும்அதனை பெற்றுக் கொள்ளும் வியாபாரிகள் அந்த பொருட்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கவும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ள கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இரா.மதி இந்திரா பெரிய தர்ஷினி, உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், வட்டார இயக்க மேலாளர் எஸ்.சுரேஷ் , வியாபார சங்கத் தலைவர் மற்றும் வியாபாரிகள் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.