June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் புகையிலை பொருட்கள் கடத்தல்-2 பேர் கைது

1 min read

Smuggling of tobacco products in Sengotai-2 persons arrested

14.10.2024
தென்காசி மாவட்டம், செங்கோட்டை புதூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் ரூபாய் 3 லட்சம் ரொக்கம் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

செங்கோட்டை இன்ஸ் பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் புதூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வேகமாக வந்த காரை மறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது காரில் இருந்த இருவரும் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்த னர். அப்போது காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை
பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் செங்கோட்டை வல்லம் ரோடு மடக்கனூர் தெருவைச் சேர்ந்த வைரவநாதன் என்பவரது மகன் லிங்கராஜ் (வயது 33) செகோட்டை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதி என்பவரது மகன் பெருமாள் சுந்தர்ராஜன் (எ) கிஷோர் (வயது 33) என்பதும் தெரிய வந்தது.

இது குறித்து புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 40 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களையும், ரூபாய் 3 லட்சம் ரொக்கம் மற்றும் காரையும் பறிமு தல் செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.