June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

அஞ்சல் அலுவலகங்களில் பயிர் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

1 min read

Introduction of crop insurance scheme in post offices

16/10/2024
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-2025 அனைத்து அஞ்சல் அலுவகங்களிலும் காப்பீடு செய்ய மத்திய, மாநில அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கோவில்பட்டி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-2025 வருடத்தின் ராபிய பருவதிற்கான புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய, மாநில அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் 2024-2025 ராபிய பருவத்தில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், பருத்தி, சோளம், நிலக்கடலை, கம்பு, சூரியகாந்தி, மிளகாய், வெங்காயம், வாழை, நெல் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.
பயிர் காப்பீட்டு வசதி தற்போது அனைத்து அஞ்சல் அலுவலங்களிலும் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலகங்களில் பயிர் காப்பீடு செய்பவர்கள் பிரீமியம் தொகை மட்டுமே செலுத்தினால் போதுமானது. இதற்கு வேறு எந்த கூடுதல் (சேவை) கட்டணமும் கிடையாது. மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகலாம்.
விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ. சுரேஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.